Tuesday, August 31, 2010

கூகுளின் ஜி போட்டோ ஸ்பேஸ்



கூகுள், தன் வாடிக்கையாளர்களுக்கு, போட்டோக்களைப் பதிந்து வைத்திட இடம் தருவதிலும், தனக்கென ஒரு தனி வழியைக் கையாண்டு வருகிறது. ஜி போட்டோ ஸ்பேஸ் எனத் தனியே ஒரு வசதியினை இதற்கெனத் தருகிறது. பயர்பாக்ஸ் பயன்படுத்துபவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்த, ஓர் ஆட் ஆன் தொகுப்பு தரப்பட்டுள்ளது. போட்டோக்களை இணைய தளத்தில் வைத்து பாதுகாப்பது இன்று பரவலாகப் பலரும் பயன்படுத்தும் ஒரு வசதியாக மாறி வருகிறது.



பல இணைய தளங்கள் போட்டி போட்டுக் கொண்டு இதற்கான வசதிகளைச் செய்து வருகின்றன. போட்டோக்களை அனைவரும் காணும் வகையிலோ அல்லது குறிப்பிட்ட சிலர் மட்டும் காணும் வகையிலோ பதிந்து வைக்கலாம். ஒவ்வொருவருக்கும் போட்டோக்களைப் பதிய தரப்படும் டிஸ்க் இடம், தளத்திற்கு தளம் மாறுபடுகிறது. ஜிமெயில் அக்கவுண்ட் உள்ளவர்கள் அனைவரும், கூகுள் தரும் ஜி போட்டோ ஸ்பேஸ் பகுதியினையும் பயன்படுத்தலாம். உங்களுக்கு போட்டோக்களை ஆன்லைனில் அனுப்புவதில் சிக்கல்களை எதிர் கொள்கிறீர்களா?



அப்லோட் செய்வதில் பெரிய அளவில் பிரச்னைகளைச் சந்திக்கிறீர்களா? சேமிக்கும் இடம் அதிகமாக உங்களுக்கு வேண்டுமா? அதற்காக நீங்கள் பயன்படுத்தும் தளம் கூடுதல் கட்டணம் கேட்கிறதா? உங்கள் தனி நபர் சுதந்திரம் இந்த வகையில் பாதிக்கப்படுகிறதா? அப்படியானால், நீங்கள் கூகுள் தரும் ஜிபோட்டோ ஸ்பேஸ் பயன்படுத்தத் தொடங்கலாம். கூகுள் தரும் கூடுதல் வசதிகளையும், அதற்கான பயர்பாக்ஸ் ஆட் தொகுப்பு குறித்தும் இங்கு காணலாம்.



கூகுள் தரும் ஜிபோட்டோ ஸ்பேஸ் வசதிக்கு எந்த நிலையிலும் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. பயர்பாக்ஸ் எக்ஸ்டன்ஷன் மூலம் 50 போட்டோக்களை ஒரு தொகுப்பாக அப்லோட் செய்திடலாம். மற்ற எந்த இணைய அப்லோடிங் வசதியைக் காட்டிலும், இது ஐந்து மடங்கு வேகத்தில் அப்லோட் செய்கிறது. பல தளங்கள், குறைந்த அளவே போட்டோக்களை சேமிக்க இடம் தருகின்றன. ஜிபோட்டோ ஸ்பேஸ் இதற்கென வரையறையை விதிக்கவில்லை.



ஜிமெயிலுக்கு ஒதுக்கப்படும் 7 ஜிபி மற்றும் கூடுதல் இடம் தரத் தயாராய் உள்ளது. இணைய தளத்தில் பதிக்கப்படும் போட்டோக்களை மற்றவர்கள் பகிர்ந்து பார்ப்பதன் மூலம், உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்த்துவிடுவார்களோ என்ற அச்சம் இருந்தால், ஜிபோட்டோ ஸ்பேஸ் அதனைத் தீர்க்கிறது. நீங்கள் உங்கள் தனிநபர் உரிமையை 100% பாதுகாத்துக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கும் தகவல்களுக்கும் click here என்ற முகவரியில் உள்ள தளத்தினைப் பார்க்கவும்.

மனிதக்கறி கிடைக்கும்" என்று விளம்பரம் செய்துள்ள ஜெர்மன் ஓட்டல்




ஜெர்மனி நாட்டில் உள்ள பெர்லின் நகரில் உள்ள ஓட்டல் ஒன்று இணையதளத்தில் கொடுத்து இருக்கும் விளம்பரம் ஜெர்மானியர்களை அதிர்ச்சியில் உறையவைத்து உள்ளது. ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, மீன்கறி மட்டும் அல்லாமல் மனிதக்கறியும் கிடைக்கும்.



மனித உடல் பாகங்களில் செய்த உணவுகள், மனித சதையில் செய்த உணவு ஆகியைவையும் கிடைக்கும் என்று அது விளம்பரம் செய்து உள்ளது. மனித உடல் பாகங்களையும், உடல் சதையையும் சப்ளை செய்ய ஆட்கள் தேவை என்றும் அது அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டு உள்ளது

அப்படியே மறக்காம உங்களோட ஓட்ட குத்திட்டு போங்க பா.... ஆனால் கள்ள ஓட்டு மட்டும் போடாதீங்க.

கம்ப்யூட்டர் மெமரி’க்கு உதவும் மரப் புரதம்!


கம்ப்யூட்டரின் `நினைவகம்’ எனப்படும் `மெமரி’யை அதிகரிக்க ஒரு மரத்தின் புரதம் உதவப் போகிறது என்றால் ஆச்சரியமாயில்லை? ஆம், `போப்லார்’ மரத்தில் இருந்து கிடைக்கும் புரத மூலக்கூறுகளையும், சிலிக்கா நானோ பார்ட்டிக்கிள்களால் ஆன மெமரி யூனிட்களையும் ஒன்று சேர்க்கும்போது, கம்ப்யூட்டர்களின் மெமரி திறன் பெருமளவு அதிகரிக்கிறது என்று ஜெருசலேம் ஹீப்ரு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.



அவர்கள், கம்ப்யூட்டருக்கான `மெமரி’ பகுதியைக் குறைத்தும், அதன் திறனை அதிகரித்தும் காட்டியுள்ளனர். இது, இப்போதைய முறைக்கு மாற்றாக அமையும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தற்போது மெமரி திறனை அதிகரிக்க முயலும்போது உற்பத்திச் செலவும் அதிகமாகிறது. சிலிக்கான் நானோ பார்ட்டிக்கிளுடன் `போப்லார்’ மரத்தின் புரதத்தைச் சேர்ப்பதற்கு ஜெருசலேம் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மரபணுப் பொறியியலையும் பயன்படுத்தி இருக்கின்றனர்.



மெமரி திறனை அதிகரிப்பதற்கு இந்தப் புதிய தொழில்நுட்பம் எப்படி உதவுகிறது என்று ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை பேராசிரியர் டேன்னி போரத்தும், அவரது மாணவர் இஸார் மெடல்ஸியும் விளக்கிக் காட்டியுள்ளனர். இந்த வெற்றியானது, கம்ப்யூட்டர்களின் நடப்பு மெமரி அளவைக் கூட்டும் அதேநேரம், அது பிடித்துக்கொள்ளும் இடத்தை வெகுவாகக் குறைக்கும். எனவே இது வர்த்தக ரீதியாக வெற்றி பெறும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

பொக்குவரவு நெரிசலை தவிர்க்க சீனா தயாரித்துள்ள நவீன "ஸ்ட்ரட்லிங் பஸ்" : ( வீடியோ இணைப்பு)


போக்குவரத்து நெரிசல் என்பது வளர்ச்சியடைந்த நாடுகள் தற்போது எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாகும். வீதிப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் பயணிகள் மற்றும் வாகனங்களின் வசதி கருதியும் நவீன பயணிகள் பஸ் ஒன்றினை சீனா அடுத்த வருடமளவில் பரீட்சார்த்தமாக வெள்ளோட்டமிடவுள்ளது. சீனாவின் தலைநகரான சனத்தொகை நெரிசல் மிக்க பீஜிங் நகரிலேயே இது பரீட்சிக்கப்படவுள்ளது.

மேற்படி பஸ்ஸின் கீழ்ப்பாகம் அகன்று விரிந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதற்கு கீழாகவுள்ள இடைவெளியில் கார்கள் மற்றும் 1.55 முதல் 1.6 மீற்றர் வரை உயரம் கொண்ட வாகனங்கள் பயணிக்க முடியும். இது "ஸ்ட்ரட்லிங் பஸ்" என அழைக்கப்படுகின்றது.

இந்நவீன பஸ், கடந்த மே மாதம் சீனாவில் இடம்பெற்ற சர்வதேச 'ஐ-டெக் எக்ஸ்போ' கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. சூரிய சக்தி மற்றும் மின்சாரத்தின் மூலம் இது இயங்குகின்றது. இதற்கான விசேட உபகரணங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மேற்பாகத்தில் சுமார் 1200 முதல் 1400 பேர் வரை பயணிக்கலாம்.

மேலும் இதனுள் சூரிய ஒளி அதிகளவில் உட்புகுவதால் பயணிகள் தங்கள் மன உளைச்சலில் இருந்தும் விடுபட முடியுமென தெரிவிக்கப்படுகின்றது. விபத்தொன்று ஏற்படின் அதிலிருந்து தப்புவதற்காக விமானங்களில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறையே இதிலும் பின்பற்றப்படவுள்ளது.

பெரிய அளவிலான வாகனங்கள் இதன் கீழ் பகுதியினுள் நுழையாமல் தடுப்பதற்காக விசேட சமிக்ஞைகளும் பொருத்தப்பட்டுள்ளன. இது பாவனைக்கு வருமிடத்து, வீதி நெரிசல் பெருமளவில் குறையுமென சீன போக்குவரத்து அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
click here video

Monday, August 30, 2010

கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்




உலக ஒப்பனைக்கு
ஒலமிடுபவர்களே……
கனக்கும் நெஞ்த்தோடும்
கலங்கும் விழிகளோடும்
கண்களை மூடி
கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்





கண்ணீரும் செங்குருதியும்
சகதியாகிப்போன
என் மண்ணில்
காற்றோடு கலந்துவிட்ட
என் உறவுகளுக்காக மீண்டும்
கண்களை மூடி
கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்



உலகமே சேர்ந்தது
என் இனத்தை
குழிதோண்டி புதைத்தது
இறந்தவரை நினைத்து
கதறுகிறேன் - மிகுதியாய்
இருப்பவரை நினைத்து
கலங்குகிறேன்
கொடிய இன வெறியனுக்கு
கை கோர்த்து நின்றது
கொடுங்கோல் ஆட்சிக்காக - இதனை நினைத்து
கண்களை மூடி
கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்



தமிழ் தாயின்சேலை தொட்டுழுக்க
தன்மானமிக்க தமிழன் தலைகுனிய
தறிகெட்டு ஓடியது சர்வதேசம்
இரவிரவாய் ஒலமிட்டு காலமது
எத்தனை கொடுமை அது
வன்னி மக்கள் உணர்வை
வார்த்தையால் வரைய முடியுமா?
என்னால் எழுத பலமில்லை
இன்னமும் என் விழியினுள் உறுதியாய்
பதிந்திட்ட நிஜங்கள் - இதனை நினைத்து
கண்களை மூடி
கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்



மாவிலாறு தெட்டு முள்ளிவாய்க்கால் வரை
உலகமே கண்டு மௌனித்தது
உண்மையை உறங்க வைத்தது
கை கூப்பி நின்று கதறினர் ஜ.நா நேக்கி
இரக்கமும் பரிவும் காட்ட
அருகதையற்றவரா?
நச்சு வாயு அடித்து கொன்று
நாசமாக்கிய என் உறவுகளை – நினைத்து
கண்களை மூடி
கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்

-----------------
உங்கள் நண்பன்
தோசை

இரகசியம்

எனக்குத் தெரியும்
அங்கே சிதறிய செங்குருதியின்
சொந்தக் காரனை

அவன் பெயர்
காற்றின் அசைவுக்குள்
தவழ்ந்து செல்லாது
அது இரகசியமாய்ப்
பேணப்பட வேண்டிய
உன்னத பெயர்

சிலரின் இதய அறைக்குள் மட்டுமே
அவனுக்கான சடங்குகள்
நடக்கும்

பெற்ற தாயும் அறியாத
பரம இரகசியம்
அவனது விடுதலை வேள்வி

அந்த செங்குருதியின்
சொந்தக் காரனின் பெயர்
எந்த நடுகல்லிலும் இல்லை

மலரும் தமிழீழத்தில்
உரத்து உச்சரிக்கப்படலாம்
அந்த வேங்கையின்
அதிசய சாதனைகள்.

நிஜத்தில் மேக்கப் இல்லாத மனிதர் ரஜினி!-ப்ருத்விராஜ்




நிஜத்திலும் மேக்கப் இல்லாத ஒரே நடிகர் ரஜினிதான். மேக்கப் போடாமல் வெளியில் செல்லும் துணிச்சல் இந்தியாவிலேயே அவர் ஒருவருக்குத்தான் உண்டு என்றார் நடிகர் ப்ருத்விராஜ்.

இது குறித்து ஏஷியாநெட் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

நான் மிக விரும்பும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிதான். திரைக்கு வெளியே எப்போதும் மேக்கப் இன்றி ரஜினியாகவே இருக்க விரும்புகிறார். இருந்தும் வருகிறார்.

தன்னை எந்த நிலையிலும் ரசிக்கும் உண்மையான ரசிகர்களால் அவருக்கு கிடைத்த தைரியம் இது. அவரால் திரைப்படங்கள் மூலம் மக்களிடத்தில் பெற்றுள்ள செல்வாக்கை வேறு எந்த நடிகரும் இதுவரை பெறவில்லை.

சிறு வயதிலேயே எனக்கு மம்முட்டி, மோகன்லாலை தெரியும் ரஜினிக்கு என்னிடத்தில் உள்ள பழக்கத்தை விட மம்முட்டி, மோகன்லாலுக்கு என்னிடம் உள்ள பழக்கம் அதிகம். சிறு வயது முதல் அவர்கள் மடியில் வளர்ந்தவன் நான். ஆனால் அவர்கள் என்னுடைய ஒரு படத்தைக் கூடப் பாராட்டியதில்லை. ஆனால் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்ற பெருமைக்குரிய ரஜினி அப்படி இல்லை.

இப்போதும் ஞாபகம் இருக்கிறது. கோழிக்கோட்டில் கார்கி படப்பிடிப்பில் இருந்தேன். காலை 5.30 மணிக்கு உடற்பயிற்சி செய்ய எழுந்தபோது எனது போனில் சென்னை லேன்ட்லைனில் இருந்து 23 மிஸ்டுகால்கள் இருந்தன. காலை நேரத்தில் கூப்பிட வேண்டாம் என்று உடற்பயிற்சிக்கு சென்றேன்.

6.30 மணியளவில் மீண்டும் அதே நம்பரில் இருந்து அழைப்பு வர எடுத்தேன். பேசியவர் நீங்கள் பிருதிவிராஜா என்றார். ஆம் என்றதும் நேரடியாக ரஜினியே பேசினார். 45 நிமிடங்கள் மொழி படத்தின் காட்சிகளை விவரித்து பாராட்டினார். நான் மலைத்து விட்டேன். அப்போதே என் மனதில் ரஜினிக்குள்ள மரியாதை உயர்ந்து விட்டது.

பொது நிகழ்ச்சிகளுக்கு மேக்கப் போடாமல் செல்லும் ஒரே நடிகர் ரஜினிதான். மம்முட்டியோ, மோகன்லாலோ மேக்கப் இன்றி வெளியே வந்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 'சீ' என்றுதான் சொல்வார்கள். மிகப் பெரிய நடிகர்களான அமிதாப்பச்சன், அனில் கபூர், சிரஞ்சீவி போன்றோரும் விக் வைத்து மேக்கப் போட்டுத்தான் வெளியே வருகிறார்கள்.

ஆனால் ரஜினி தனித்துவம் உள்ள மனிதர். பயமில்லாதவர். அவர் மக்களிடத்தில் பெற்றுள்ள செல்வாக்கை வேறு எந்த நடிகராலும் பெற முடியாது என்றார்.

கால‌ம் தா‌‌ழ்‌ந்த ‌தீ‌ர்‌ப்பு: கோ‌கிலவா‌‌ணி த‌ந்தை கருத்‌து

தர்மபுரி பேரு‌ந்து எரிப்பு வழக்கி‌ல் கால‌ம் தா‌ழ்‌‌ந்த ‌தீ‌ர்‌ப்பாக இரு‌க்‌கிறது எ‌ன்று பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட மாண‌வி கோ‌கிலவ‌ா‌ணி‌யி‌ன் த‌ந்தை ‌‌வீராசா‌மி கூ‌றியு‌ள்ளா‌ர்.

தர்மபுரி பேரு‌ந்து எரிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் 3 பேருக்கும் அளிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் இன்று உறுதி செய்துள்ளது

இந்நிலையில் தீர்ப்பு குறித்து பாதிக்கப்பட்ட பெண் கோகிலவாணியின் தந்தை வீராச்சாமி‌யிட‌ம் செ‌ய்‌தியாள‌ர்க‌ள் பே‌ட்டி க‌‌ண்டன‌ர்.

அ‌ப்போது, தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டது தான் ‌எ‌ன்று ‌கூ‌றிய ‌வீராசா‌மி, ஆனால் ‌நிக‌‌ழ்வு நடந்தது 2000ஆம் ஆண்டு, தீர்ப்பு 2010ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது எ‌ன்றா‌ர்.

காலம் தாழ்‌ந்த தீர்ப்பாக இருக்கிறது எ‌ன்று‌ம் பட்டப்பகலில் பலர் முன்னிலையில் கண்கூடாக நடந்த ‌நிக‌ழ்வுக்கு இவ்வளவு காலம் கழித்து தீர்ப்பு வழங்கியிருக்கின்றனர் என்று‌ம் வீராச்சாமி வேதனை தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ம‌ற்றொரு மாண‌வி கா‌த்‌ரி‌யி‌ன் த‌ந்தை வெ‌‌ங்கடே‌ஷ், தீர்ப்புக்காக பாடுபட்ட அரசாங்கத்துக்கும், மாணவ மாணவிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் ந‌ன்‌றி தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மே‌லு‌ம் சேல‌ம் ‌நீ‌திம‌ன்ற‌ம் அ‌ளி‌த்த ‌தீ‌ர்‌ப்பு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் வரை ‌நீடி‌க்க வே‌ண்‌டு‌ம் எ‌ன்று வே‌‌ண்டினே‌ன், அதேபோ‌ல் நட‌ந்து‌ள்ளது எ‌ன்றா‌ர் வெ‌ங்கடே‌‌ஷ்.

போலி மனிதர்கள்

சிரிப்புக்குள் விஷம் வைத்து செலவழிப்பார்

சில்லறைக்கு மட்டுமே வரவு வைப்பார்

கறுப்புக்குள் பணமாக குவித்து வைப்பார்

கடவுளுக்கும் கொஞ்சூண்டு கொடுத்து வைப்பார்

போகவர உறைத்தாலும் பொருட் படுத்தார்

போன்சாய் மரமாக வெட்டிக் கொள்வார்

பருப்புக்கும் அரிசிக்கும் அலைக் கழிவோர்

நெருப்புக்குள் சினமாக நிமிர்ந்து விட்டால்

அறுப்புக்குக் களையாக ஆய் விடுவார்

அங்கங்கே மிதிபட்டு அழிந்திடுவார்

----------------------------
நன்றியுடன்
தோசை நண்பன்

உங்களுக்கு ஒண்ணுமே இல்லை

மொட்டைக் கடுதாசி

ஒரு அதிகாரி மேஜையில் வைத்திருந்த கடிதத்தையும், கவரையும் காணாது தவித்தார். காரணம் அந்தக் கடிதங்களில் முகவரி எழுதாமல் வைத்திருந்தார். பியூனைக் கூப்பிட்டு, "மேஜை மீது வைத்திருந்த கவரைப் பார்த்தாயா? என்று கேட்டார்.

"அதுவா...! அதைத் தபாலில் போட்டு விட்டேன்" என்றான் பியூன்.

"தபாலில் போட்டு விட்டாயா? அந்தக்கடிதக் கவரில் விலாசம் எழுதவில்லையே!" என்றார்.

அதற்கு பியூன், "எனக்குத் தெரியும் சார்! நேற்று நம் அலுவலகத்திற்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்ததே...அதற்குப் பதில் எழுதியிருப்பீர்கள் என்று நினைத்தேன். அவர்களுக்கும் அட்ரஸ் இல்லாமல் போகட்டும் என்று நினைத்துத் தபாலில் போட்டு விட்டேன்." என்றான் பியூன்.

உங்களுக்கு ஒண்ணுமே இல்லை

ஒருவர் தன் தபால்கார நண்பரைச் சந்தித்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்ததால், நண்பர் தபால்காரரைப் பார்த்து, "உங்களைப் போல் வேலை பார்க்க வேண்டும்" என்றார்.

தபால்காரர், "ஏன்? என் வேலையில் அப்படி எதைக் கண்டு விட்டாய்?" என்றார்.

அதற்கு நண்பர், "சாலையில் பார்க்கும் எல்லோரும் உன்னைப் பார்த்து, எனக்கு ஏதாவது இருக்கா? என்று கேட்கிறார்கள். நீயும் அவர்களைப் பார்த்து "உங்களுக்கு ஒன்றும் இல்லை" என்கிறாய். அதைக் கேட்டு அவர்களும் கோபப்படுவதில்லை. மேலும் நல்லாப் பார்த்துச் சொல்லுங்க, எனக்கு ஏதாவது இருக்கா? என்று கேட்கிறாங்க. நீயும் "நல்லாத்தான் பார்த்துச் சொல்கிறேன். உங்களுக்கு ஒண்ணுமே இல்லை" என்கிறாய். அவர்களும் பேசாமல் சென்று விடுகிறார்கள். நான் யாரையாவது பார்த்து உங்களுக்கு ஒண்ணுமே இல்லை என்று சொல்ல முடியுமா? அதனால்தான் அப்படிச் சொன்னேன்" என்றார்.

காணாமல் போன மனைவி

ஒருவன் வேகமாக தபால் ஆபீஸ் நோக்கி வேகமாக ஓடி வந்தான். அங்கே இருந்த போஸ்ட் மாஸ்டரிடம், "என் மனைவி மீண்டும் காணாமல் போய் விட்டாள்." என்றான்.

போஸ்ட் மாஸ்டருக்குக் கோபம் வந்தது. "உன் மனைவி காணாமல் போய் விட்டால் போலீஸ் ஸ்டேசனில் போய் புகார் கொடு. இங்கே வந்து ஏன் சொல்கிறாய்? என்றார்.

அதற்கு அவன், "எனக்குத் தெரியும் சார்! போன தடவை காணாமல் போன போது அங்கேதான் புகார் கொடுத்தேன். அவர்கள் கண்டுபிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள்" என்றான்.

தபால்காரர் போயிட்டாரா...?

ஒருவர் பல ஆண்டுகள் தபால்காரராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்று அமர்ந்திருந்தார். அவரைப் பார்க்க வந்திருந்த நண்பர், "உன்னைப் போல அரசாங்க வேலை பார்த்து ஓய்வு பெற கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்றார்.

அதற்கு அந்த தபால்காரர், " ஆமாம் நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும். தபால்காரன் வேலை ஒரு வேலையா? காலையில் தபால் ஆபிஸ்க்கு வருகிறவர்கள் "தபால்காரர் போயிட்டாரா?" என்று விசாரிக்கிறார்கள். அதாவது பரவாயில்லை... மாலையில் தபால் ஆபிஸ் வருபவர்கள் "என்ன எடுத்தாச்சா?" என்று விசாரிக்கிறார்கள்." என்று எரிச்சலோடு சொன்னார்.


ரவி: நான் விமலாவுக்கு போன் பண்ணினப்ப அவங்க அம்மா எடுத்துட்டாங்க...
ராமு: அட, அப்புறம் என்ன ஆச்சு?
ரவி: ராங் மெம்பர்னு சொல்லி வெச்சுட்டேன்
*******************************************************************************************
மகன்: அப்பா! நான் B.A பண்ணவா? M.A பண்ணவா?

அப்பா: எதை வேணும்னாலும் பண்ணு என்னை தொந்தரவு பண்ணாதே...
*******************************************************************************************
டாக்டர்: ஹலோ! ரவி சவுக்கியமா இருக்கீங்களா?
ரவி: சவுக்கியமா இருந்தா ஏன் உங்களை பார்க்க வரேன்?
*******************************************************************************************
ரவி: படிப்பை முடிச்சிட்டீங்க மேல என்ன பண்ணப் போறீங்க?
ரகு: மேல ஒண்ணும் பண்ண முடியாது. பூமியிலேதான் எதாவது பண்ணனும்.

*******************************************************************************************
சோகமாக இருந்தார் சிங்.

ஏன் சோகமாக இருக்கிறாய்?-பல்சிங்.

பந்தயத்தில் 800 ரூபாய் தோற்றேன்.

என்ன பந்தயம்?

நேற்று இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி. இந்தியா ஜெயிக்கும் என்று 500 ரூபாய் பந்தயம் கட்டினேன்.
தோற்றுப் போனேன்.

500 ரூபாய் தானே தோற்றாய். 800 ரூபாய் என்கிறாயே?

‘ஹைலைட்ஸ் காட்டினார்கள்’ அதிலும் பந்தயம் கட்டினேன்.

*******************************************************************************************

பாமா : பல் ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகணும்.
ராமு : சொத்தையோட போகணும்
--------------------------------------------------------------------------------
உமா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்
பாமா : எதை வைத்து?
உமா : பேனாவை வைத்து தான் எழுதினேன்!
--------------------------------------------------------------------------------

விஜய் : கொக்கு ஏன் ஒத்தக்கால்லே நிக்குது?
அஜய் : இன்னொரு காலைத் தூக்கினால் கீழே விழுந்துடுமே அதுதான்.
-------------------------------------------------------------------------------

ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.
பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.
ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!
--------------------------------------------------------------------------------

கரண் : கழுதைக்குப் பிடித்த ரொட்டி எது?
கிரண் : தெரியலியே?
கரண் : சுவரொட்டி - தான்.
கிரண் : ?????????

--------------------------------------------------------------------------------

எனக்கு வராத எஸ்.எம்.எஸ்
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
என்ன... தேடறீங்க..?
அதான் தலைப்பிலேயே போட்டிருக்கேனே...
வராத எஸ்.எம்.எஸுன்னு...
ஹி... ஹி...


--------------------------------------------------------------------------------
ஒருவன்;" இந்த எறும்பு சாக்பீசை பார்த்தபிறகுதான் எனக்கு ஒரு விஷயம் புரியுது!"

இரண்டாமவன்:"என்ன புரிஞ்சிடுச்சு?"

முதலாமவன்:"எங்கயாவது ஆக்ஸிடெண்ட் நடந்தா போலீஸ் எதுக்கு சாக் மார்க் போடறாங்க?"

இரண்டாமவன்:"எதுக்கு?"

முதலாமவன்:"எறும்பு வராம இருக்கத்தான்"

--------------------------------------------------------------------------------

சர்தார்ஜியிடம் அவரது நண்பர்: என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய்.

சர்தார்ஜி: சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.
-------------------------------------------------------------------------------

பில்கேட்ஸ் தமிழனாக இருந்திருந்தால்



பில்கேட்ஸ் தமிழனாக இருந்திருந்தால்
நிறுவனர் கணிப்பொறி மென்பொருள் வல்லுனர்

விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள்.
அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.

Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு

Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா

Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு

Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு

Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி

Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா

Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?

General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு

குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில...

குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம். குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதது என்னென்ன?

*கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

*குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.

*தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

*சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

*சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.

*குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

* குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

*குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

*உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

*படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

*குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.

பெண் குழந்தைகள் லேட்டஸ்ட் ஃபேஷன்....

1 .குழந்தைகளின் இப்ப உள்ள விருப்ப கலர் பர்பில்,வயலெட்,ப்ளம் ,பின்க் ....

2.அவங்க நீளமாக தொங்கும் மெல்லிய காது அணிகலன்களை தான் விரும்புகிறார்கள்.கேட்டால் அது அவர்களை ஸ்லிம்மாக,உயரமாக காட்டுகிறதாம்.

3.லிப் க்லாஸ் போட விரும்புகிறார்கள்.

4.அவங்கவங்க டீச்சர்ஸ்போல் ட்ரஸ் பண்ண விரும்புகிறார்கள்.

5.அழகான ஹேர் கிளிப்ஸ் வாங்க விருப்பம்,கண்ணாடியில் பார்த்து மேக்கப் பண்ண விருப்பம்.

6.ஆடை விருப்பம்,மினி ஸ்கர்ட்,டைட்ஸ்,ஃபுல் ஆர்ம் டீசர்ட்.ட்ரௌசர்ஸ் ஸ்லீவ்லெஸ் டாப்ஸ்,ட்ரெண்டி சூஸ்.இதெல்லாம் வெளியே போகும் போது.

7.வீட்டில் அம்மாவின் துப்பட்டா,சேலை வைத்து விளையாட ஆசை.

8.குழந்தைகளின் விருப்பம் எதுவாகவும் இருக்கலாம்,நாம் அவர்களுக்கு எது சூட் ஆகும் என்று எடுத்துச்சொன்னால் கேட்டுக்கொள்வார்கள்.

9.ஒரு முறை நம் விருப்பம் என்றால் ,மறு முறை அவர்கள் விருப்பத்திற்கு விட்டுப்பிடித்தால் எல்லோரின் விருப்பமும் நிறை வேறும்.

10. இல்லாவிட்டால் எப்பவும் வெளியே கிளம்பும் முன் அடம் தான்.ஆட்டம் தான் ட்ரஸ் பண்ண பெரிய போராட்டம்.

11.அம்மாவும் மகளும் ஒரே கலர் ட்ரஸ் என்று கூட சொல்லி அவர்களை நம் வழிக்கு கொண்டு வர ட்ரெஸ் செலக்ட் செய்து வாங்கினால் அதனை கருத்தில் கொண்டு நாம் கொடுக்கும் ட்ரெஸை அணிந்து கொள்வார்கள்.

இந்த பிரச்சனைகளை நிறைய பெற்றோர்கள் பேசிக்கொள்வது.குழந்தைகளுக்கு நாம் எது நல்லது எது கெட்டது என்று எடுத்துச்சொன்னால் புரிந்து கொள்வார்கள்.

அழகு குறிப்பு (மூக்கு மற்றும் காது)

கிளி, குடை மிளகாய், சப்பை, கோணல், கூர்மை இப்படி பல வார்த்தைகளோடு சேர்த்து மூக்கின் தோற்றத்தினையும், அளவினையும் குறிப்பிடுகிறோம். ஆனால் எப்படிப்பட்ட ஷேப் உள்ள மூக்கினையும் ஒழுங்காக பராமரித்து, அழகாக மேக்கப் செய்து கொண்டால் ஷேப்பைப் பற்றிய கவலை தேவையில்லை. மூக்கின் பராமரிப்பு மிகவும் எளிது. ரெகுலரான பேஷியல் கூட போதும். அதுவும் முடியாவிட்டால் வீட்டில் செய்து கொள்ளும் சின்ன ட்ரீட்மெண்ட்டே போதும். மிக எளிதான மூக்குக்கான அழகுக் குறிப்பினை பார்ப்போம்.

மூக்கில் ஏற்படும் முக்கிய பிரச்சனை பிளாக் ஹெட்ஸ்தான். சிலருக்கு ஒயிட் ஹெட்ஸும் காணப்படும். இது இரண்டுக்குமே முறையான கவனிப்பு அவசியம். பிளாக் ஹெட்ஸுடன் இருக்கும் மூக்கு, அருகில் வந்து பார்ப்பவருக்கு நிச்சயம் ஒரு வித அசூசையை ஏற்படுத்தும். கடைகளில் விறகும் பிளாக் ஹெட்ஸ் ரீமூவல் ஸ்ட்ரிப்ஸ் அதிக நாட்களாக இருக்கும் பிளாக் ஹெட்ஸை முழுதுமாக நீக்காது. ஏனென்றால் நாள்பட்ட பிளாக் ஹெட்ஸ் மிகவும் அழுத்தமாக இருக்கும். எளிதாக ஸ்ட்ரைப்ஸ் மூலம் நீக்க முடியாது. எனவே ஸ்ட்ரைப்ஸை (ஒரு முறை பிளாக் ஹெட்ஸை முழுதும் நீக்கிவிட்டு) ரெகுலர் பராமரிப்புக்கு மாதம் ஒரு முறை என்று உபயோகிக்கலாம்.

நாள்பட்ட பிளாக் ஹெட்ஸுக்கு மிகவும் சரியான ட்ரீட்மெண்ட், ஆவி பிடித்தல்தான். வீட்டிலேயே பேஷியலுக்கு செய்வதுபோல் எண்ணெய்ப்பசை உள்ள நல்ல பேஸ் மசாஜ் க்ரீமை மூக்கிற்கு நன்றாக தடவி, மசாஜ் செய்ய வேண்டும். மூக்கின் பிளாக் ஹெட்ஸ் உள்ளவர்கள், விரல்களால் மூக்கின் பக்க வாட்டிலும், நுனியிலும் அதிக நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் கொதித்த நீரை ஊற்றி, நன்றாக வேர்க்கும்வரை ஆவி பிடிக்க வேண்டும். இப்போது வெளிச்சமான இடத்தில் அமர்ந்து, கண்ணாடியைப் பார்த்து பிளாக் ஹெட்ஸ் இருக்கும் இடங்களில் பிளாக் ஹெட் ரிமூவரால் (பேஷியல் கிட்டில் இருக்கும். கிடைக்காவிட்டால் ஸ்டெரிலைஸ் செய்த டீஸ்பூனின் முனை கொண்டு நீக்கலாம்) மெதுவாக அழுத்த வேண்டும். வெளியே வேரோடு வரும் பிளாக் ஹெட்ஸை டிஷ்யூவால் துடைத்து எடுத்துவிடுங்கள். இப்படியே மூக்கில் உள்ள பிளாக், ஒயிட் ஹெட்ஸ் முழுதுமாக நீக்கி விடலாம். இப்போது குளிர்ந்த நீரில் மூக்கினை நன்றாக கழுவினால் போதும். இந்த ட்ரீட்மெண்ட் செய்யும் முன்பு முகத்திற்கு ஸ்க்ரப் போடுவதென்றாலும் போடலாம். ஆனால் ட்ரீட்மெண்ட் செய்த பிறகு ஸ்க்ரப்பிங் கூடாது.


ரெகுலராக வாரம் ஒரு முறை முகத்தினை ஸ்க்ரப் செய்யும்போது மூக்கு பகுதியில், பக்கவாட்டில் மசாஜ் செய்தாலே ஒயிட் ஹெட்ஸ் வராது. மூக்கின் உள்ளே ஒரு சிலருக்கு அதிகமாக முடிகள் இருந்து, வெளியில் லேசாக எட்டிப் பார்க்கும். இதுவும் அழகை கெடுக்கிற விஷயம்தான். சின்னதாக புருவத்தை ட்ரிம் செய்ய உதவும் கத்தரிக்கோலை கொண்டு லேசாக ட்ரிம் செய்துவிடலாம். இதற்கென்று பிரத்யேகமான கத்தரிக்கோலும் கடைகளில் கிடைக்கும். இந்த தொல்லைகள் பொதுவாக 40 வயதை தாண்டியவர்களுக்கு அதிகம் இருக்கும். அதிக எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும், எண்ணெய்ப்பசை சருமம் உள்ளவர்களுக்கும் பிளாக் ஹெட்ஸ் அதிகம் காணப்படும். நார்மல், ட்ரை ஸ்கின் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சணை குறைவு.

மூக்கு குத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலிலேயே எந்த இடத்தில், எந்த பக்கத்தில் மூக்கை குத்த வேண்டும் என்று சரியாக மார்க் செய்து கொண்டு செயல்படுவது முக்கியம். காது போல அல்லாமல், தவறான இடத்தில் துளை போட்டுவிட்டால் முகத்தின் அழகை பாதிக்கும். துளையை மறைப்பதும் மிகவும் கடினம். மூக்கு குத்தப் பிடிக்காதவர்கள் கல்யாணத்துக்கு என்று ட்ரெடிஷனல் மேக்கப் செய்யும்போது மூக்கில் கல் ஸ்டிக்கர் கூட ஒட்டிக் கொள்ளலாம். மூக்கு குத்தாமல் செய்யப்படும் ட்ரெடிஷனல் அலங்காரங்கள் ஒரு வித முழுமையடையாததுபோல இருக்கும். அதனால் கல்யாணத்துக்கு மேக்கப் செய்பவர்கள் மிகவும் (மூக்குத்தி போடப் பிடிக்காதவர்கள்) ட்ரெடிஷனலான மேக்கப்பைத் தவிர்த்து, கொஞ்சம் மாடர்ன் லுக்கில் மேக்கப் செய்தால் அந்த குறை தெரியாது. அதே போல் கல்யாணங்களில் புல்லாக்கு (நரசிம்மா படத்தில் " ரா ரா நந்தலாலா" பாட்டு ஆரம்பத்தில் ரம்யா கிருஷ்ணன் போட்டிருப்பதுதான் புல்லாக்கு. அந்த அளவாவது மூக்கிற்கும் உதட்டிற்கும் இடைவெளி தேவை) போடும்போது நமக்கு அதற்கேற்ற முக அமைப்பு இருக்கிறதா என்று பார்த்து உபயோகிக்க வேண்டும். சரியான முக அமைப்பு (மூக்கிற்கும் வாய்க்கும் இடையே உள்ள தூரம்) இல்லாவிட்டால் மூக்கு ஒழுகுவது போல தோற்றம் ஏற்பட்டுவிடும்.

மூக்கிற்கு மேக்கப் போடும்போது நமது மூக்கு ஷேப்பை கவனித்து அதற்கு தகுந்தாற்போல் மேக்கப் செய்ய வேண்டும். சில டெக்னிக்குகளை பொதுவாக இங்கே சொல்கிறேன். சப்பையான மூக்கு உள்ளவர்கள் முகத்திற்கு பவுண்டேஷன் மற்றும் பவுடர் அப்ளை செய்த பிறகு, முக நிறத்தைவிட கொஞ்சம் ஒரு ஷேடு குறைவான டார்க் நிறத்தில் உள்ள ரூஜை மூக்கின் இரு ஓரங்களிலும், அதாவது இரு புருவத்தின் ஆரம்பங்களிலிருந்தும் மூக்கு அடிவரை, நேராக கோடு போடுவது தடவ வேண்டும். இப்போது நடுபக்கம் மட்டும் லைட்டாகவும் ஓரங்கள் பளிச்சென்று தெரியாதது போலவும் இருக்கும். சப்பை மூக்கு என்று பார்த்தால் தெரியாது. இதே போல் ஒரு பக்கம் சிறிது அகலமாகவும், ஒரு பக்கம் சரியாகவும் உள்ள மூக்கு தோற்றமுள்ளவர்கள் ஒரு பக்கம் மட்டும் இதே போல் டார்க் கலரை அப்ளை செய்தால் நன்றாக இருக்கும். பொதுவாக இந்த வகை அப்ளிகேஷனை நார்மலான மூக்கு ஷேப் உள்ளவர்களும் செய்து கொள்ளலாம். மூக்கு அழகாக தெரியும்.

இப்படி டார்க் ஷேட் ரூஜைக் கொண்டே மூக்கின் ஷேப்பினை அழகாக்கிவிட முடியும். ஆனால் இந்த வித மேக்கப் போடும்போது அடிக்கடி செய்து பார்த்து பழகிக் கொள்வது அவசியம். புதிதாக எங்கேயாவது செல்லும்போது திடீரென்று ட்ரை செய்து பார்ப்பது பல சமயங்களில் காலை வாரிவிடும். மேக்கப் செய்து பார்த்து, போட்டோ எடுத்துப் பார்த்தால் நமது மேக்கப்பின் குறைகளை நாமே கண்டுபிடித்துவிடலாம். ரூஜ் பளபளப்பில்லாத மேட் லுக் ரூஜாக இருப்பது அவசியம். ஜெல் டைப் இதற்கு சரி வராது.

அடுத்து காதுகள் பராமரிப்பினைப் பார்ப்போம். குழந்தைகளுக்கு காது குத்தும்போதே, மூக்கிற்கு சொன்னதுபோல் சரியான ஸ்பாட்டை குறித்துக் கொள்வது அவசியம். பலருக்கு வயதானால் தோடுகளை பட்டன் இன்றி போட இயலாது. அதிக கனமுள்ள தோடுகளைப் போடுவதால் துளைகள் பெரிதாகிவிடும். இதனை எளிதாக சரி செய்து கொள்ள முடியும். மருத்துவரை அணுகினால் அவர், இப்படி பெரிதாக உள்ள துளைகளில் லேசாக கீறிவிட்டு தைத்துவிடுவார். லோக்கல் அனஸ்தீஷியா கொடுப்பதால் வலியெல்லாம் இருக்காது. சில நாட்களில் துளைகள் சேர்ந்துவிடும்.


நம்ம ஊரில் இந்த ட்ரீட்மெண்ட் பொதுவாக எல்லா பொது மருத்துவர்களும் செய்வார்கள். அதிக எடையுள்ள தோடு மட்டுமின்றி வளையங்களை அணிபவருக்கும் இந்த பிரச்சணை ஏற்படும். தூங்கும்போது இந்த வகை தோடுகளை கழட்டி வைத்துவிடுவது நல்லது. அதேபோல் சிலர் எப்போதும் தோடுகளை அணிந்து கொண்டே, அதனை ரெகுலராக க்ளீன் செய்யாமல் இருப்பார்கள். இதனால் காதுகளில் மற்றும் தோடுகளில் அழுக்கு சேர்வது மட்டுமில்லாமல் காதின் நிறமும் கறுப்படையக்கூடும். இப்படி நேரமில்லை என்று சாக்கு சொல்பவர்கள் வாரம் ஒரு முறை தலைக்கு குளிக்கும்போதாவது தோடுகளை கழற்றி சோப் வாட்டரில் பிரஷ் கொண்டு கழுவி க்ளீன் செய்யலாம். எண்ணெய்ப் பிசுக்கு, அழுக்குகளினால் ஏற்படும் துர்நாற்றமும் போகும்.

அடுத்து முக்கியமான விஷயம் காதுகளை சுத்தம் செய்வது. தரமான பட்ஸை உபயோகித்து காதுகளை சுத்தம் செய்வது மிகவும் அவசியம். நம் ஊர்களில் கடை வாசல்களில் பரிதாபமாக தோற்றமளிக்கும் சின்ன பிள்ளைகள் விற்கும் பட்ஸினை ஒரு போதும் வாங்காதீர்கள். அவர்களிடம் பரிதாபம் ஏற்பட்டால் பணமாக வேண்டுமானால் சும்மா கொடுங்கள். ஆனால் பொருள் வாங்கி உதவி செய்கிறேன் என்று வியாதிகளை வாங்கிக் கொள்ள வேண்டாம். அதிக விலை இருந்தாலும் ஜான்சன்& ஜான்சன் போன்ற தரமான பட்சுகளை வாங்கி உபயோகியுங்கள். பஞ்சும் அப்படியே. குழந்தைகளுக்கு சின்ன பருத்தி துனியினைக் கொண்டு காதுகளை க்ளீன் செய்தால் போதுமானது அல்லது குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக உள்ள பட்ஸினை உபயோகிக்கலாம். இந்த வகை பட்ஸ்கள், முனை பெரிதாக காது உள்பக்கம் வரை போக முடியாமல் இருக்கும். எனவே பயப்படாமல் உபயோகிக்கலாம்.

காதுகளுக்கு அழகுப் படுத்துதல் என்று தனியாக எதுவும் தேவையில்லை. ஒரே ஒரு விஷயம் மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும். முகத்திற்கு மேக்கப் போடும்போது காதுகளுக்கும் சேர்த்து பவுண்டெஷன், பவுடர் தடவுங்கள். இல்லாவிட்டால் காதுகள் தனி நிறத்தில் இருக்கும். நிறைய தோடுகளை சைடு காதில் குத்திக் கொள்வதைக் காட்டிலும், பட்டன் டைப் அல்லது பிரஸ்ஸிங் டைப் வளையங்களை உபயோகித்தால் பேஷன் மாறும்போது நாமும் வடுக்கள் இல்லாமல் மாறிவிடலாம். சிறு வயதுக்காரர்கள் பார்ட்டி, கல்யாணம் என்று மேக்கப் செய்யும்போது, காதை மறைக்கும் பட்டையான மாட்டல் போடலாம். ஆனால் வயதானவர்களுக்கு இன்விசிபிள் டைப் மாட்டல்(கண்ணுக்கு தெரியாத வண்ணம்) தான் பொருந்தும். அதுவும் கூட பட்டன் போட விருப்பம் இல்லாதவர்களுக்கு ஒரு சாய்ஸ் மட்டுமே. பேஷன் தோடுகள் வாங்கும்போது ஒவ்வாமை, எடை இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு வாங்குங்கள். காது, மூக்கு பராமரிப்பு மிகவும் எளிதான விஷயம். சின்ன அக்கறை நல்ல தோற்றத்தினையும், அழகையும் கொடுக்கும்.

விண் பெட்ரோல் (WinPatrol) : வித்தயாசமான ஆண்டிவைரஸ்

நமக்குத் தெரியாமல் நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் அமர்ந்து கொண்டு நம்மை ஹைஜாக் செய்திடும் வைரஸ் புரோகிராம்கள் இப்போது அதிகம் வரத் தொடங்கி உள்ளன. மேலும் நம்முடைய பெர்சனல் தகவல்களைத் திருடி அனுப்பும் வைரஸ்பைல்களும் நிறைய வருகின்றன. இவை நம் கம்ப்யூட்டரில் புகுந்து அதன் என்ட்ரியை கம்ப்யூட்டரின் ரெஜிஸ்ட்ரியில் பதிவு செய்திடுகையிலேயே தடுக்க முயன்றால் எவ்வளவு நன்மையாக இருக்கும். இத்தகைய பணியைத்தான் விண் பெட்ரோல் (WinPatrol) என்ற புரோகிராம் செய்கிறது.

இந்த புரோகிராமினை ஏ.ஓ.எல். இமெயில் கிளையண்ட் புரோகிராமினை வடிவமைத்த Bill Pytlovany என்பவர் உருவாக்கியுள்ளார். இந்த புரோகிராம் கம்ப்யூட்டரில் பதிந்தவுடன் நம் கம்ப்யூட்டரின் ரெஜிஸ்ட்ரியை ஒரு ஸ்நாப் ஷாட் எடுத்து வைத்துக் கொள்கிறது. பின் அதில் ஏதேனும் கோட் வரிகள் எழுதப்படும்போதெல்லாம் இது போல எழுதப்பட இருக்கிறது. இந்த புரோகிராம் முயற்சி செய்கிறது என்று எச்சரிக்கை செய்வதுடன் நீங்கள் அனுமதி கொடுத்த பிறகே ரெஜிஸ்ட்ரியில் எழுதவிடும்.



இதன்மூலம் நாம் விரும்பும் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடுகையில் மட்டுமே நாம் இதற்கு அனுமதிக்கலாம். திருட்டுத்தனமாக நுழைந்திடும் புரோகிராம்கள் எழுத முயற்சிக்கையில் அவற்றின் பெயரைப் பார்த்துவிட்டுத் தடுத்துவிடலாம். இந்த வகையில் விண் பெட்ரோல் ஒரு செக்யூரிட்டி மானிட்டராகச் செயல்படுகிறது.

வழக்கமான ஆண்டி வைரஸ் தொகுப்புகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட வைரஸ் பைல்களின் செயல்பாட்டினை வைத்து அவற்றை அடையாளம் கண்டு தடுக்க முயற்சி செய்திடும். ஆனால் இந்த புரோகிராம் வைரஸ் புரோகிராம்களுக்கென உள்ள சில மாறுபட்ட செயல்தன்மைகள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு செயல்படுகிறது.

இதனை இலவசமாக டவுண்லோட் செய்திட இந்த தளத்திற்குச் செல்லவும்.

இன்டர்நெட் பேச்சு வழக்கு அகராதி

இன்டர்நெட்டில், ஆங்கிலம்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிற மொழி. சாட்டிங் போதிலும் சரி, நண்பர்களுக்குள் இமெயில் அனுப்பும் போதும் சரி, ஆங்கிலம் கொச்சை வழக்கில் பயன்படுத்தப்படுகிறது. எப்படி வட்டார வழக்கில் சில வார்த்தைகள் நமக்கு புரிவதில்லையோ அதே போல் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்குக கூட இந்த பேச்சுவழக்கு புரிவதில்லை.


இதை புரிந்து கொள்வதற்காக ஓர் அகராதியையே இப்போது வெளியிட்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.


குழந்தைகள் என்னென்ன வார்த்தைகளை இன்டர்நெட்டில் பேசிக்கொள்கிறார்கள் என்று பெற்றோர்களுக்கு புரிய வேண்டும் என்று நினைத்தால் இந்த வெப்சைட்டுக்கு அவசியம் செல்ல வேண்டும்.

Click Here

இங்குள்ள சர்ச் பாக்சில் உங்களுக்கு புரியாத அந்த சங்கேத மொழியை கொடுத்தால் அதற்குரிய அர்த்தம் விளக்கப்படுகிறது. குறிப்பாக, lol என்ற வார்த்தைக்கு, laughing out loud என்பது அர்த்தம் என்று தெரிய வரும். இதே போல், 10 - thank you, 10x - thanks, 2b - to be, b4n - bye for now, cb - come back, coz - because



உள்ளிட்ட வார்த்தைகள் இன்டர்நெட்டில் அடிக்கடி பயன்படுத்தும் சுருக்க மொழி. இது போன்ற ஏராளமான வார்த்தைகளை இந்த வெப்சைட் தொகுத்துள்ளது.

உங்களுக்கு இதே போன்ற வார்த்தைகள் தெரிந்தால் கூட நீங்களும் இந்த வெப்சைட்டுக்கு வழங்க தனிப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

அடிக்கடி நாம் தவறாக பயன்படுத்தும் வார்த்தைகள் எவை என்பதை தனிப்பக்கத்தில் காணலாம். இன்டர்நெட்டுக்கு என தனி வட்டார மொழி உருவாகி விட்டது என்பதை இந்த வெப்சைட் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அசர வைக்கும் மைக்ரோசாப்டின் Project Natal (இந்த demo வீடியோவை நீங்களே பாருங்களேன்! இது Science Fiction படத்தை விட அருமையாக உள்ளது)





பொதுவாகவே மைக்ரோசாப்டுக்கு பிற நிறுவனங்களை காப்பி அடித்து(reengineering செய்து) புதிய பிராடக்ட்கள் வெளியிடும் என்ற பெயர் உள்ளது.அந்த பெயரை மாற்றும் வகையில் தற்போது Project Natal என்ற புதிய முயற்சியில் இறங்கி உள்ளது.

கையின் அசைவுகளை கண்டு பிடித்து அதன் மூலம் வீடியோ விளையாட்டு கொண்டு வந்து Wii விளையாட்டு மாபெரும் புரட்சி செய்த்தது.மைக்ரோசாப்ட் நிறுவனம் அதை காப்பி செய்யாமல் தற்போது புதிய புரட்சிகரமான தொழில்நுட்பத்தில் அடுத்த தலைமுறைக்கான வீடியோ விளையாட்டுக்கான தொழில்நுட்பத்தில் இறங்கி உள்ளது.அதற்கு தான் Project Natal என்று பெயர்.

இந்த விளையாட்டை விளையாட எந்த சென்சார்கலையும் உடலில் அணிய வேண்டியது இல்லை. மேலும் மற்ற விளையாட்டை போல கையை மட்டும் பயன் படுத்த வேண்டியது இல்லை.நம் உடலின் அனைத்து பகுதிகளையும் விளையாட்டிற்கு பயன் படுத்தலாம். நம் உடலின் அசைவுகளை இன்ப்ரா ரெட் கேமரா மூலம் பல புள்ளிகளிலிருந்து கண்டறிந்து அதன் மூலம் கம்ப்யூட்டரின் உள் முப்பரிமான உருவம் செயற்கையாக வடிவமைக்கிறது. பிறகு நாம் செய்யும் அசைவுகள் அனைத்தையும் அந்த உருவத்தின் மூலம் செய்ய வைத்து உண்மையான விளையாட்டு போல் உணர செய்கிறார்கள்.

நான் கூறுவதை கேட்பதை விட மைக்ரோசாப்ட்டின் இந்த Demo Video Click Here நீங்களே பாருங்களேன்! இது Science Fiction படத்தை விட அருமையாக உள்ளது. உண்மையிலேயே நம்பவே முடியவில்லை.

புகைப்படம் இல்லாம வலை உலாவியை திறக்க



நண்பர்களே நாம் வீட்டில் சில நேரங்களில் சில பதிவுகளை படிக்கும் போது யாராவது வந்து பார்த்துவிடுவார்களோ என்ற பயத்துடனே படித்துக் கொண்டிருப்பார்கள். அப்படி பார்த்து விட்டால் உடனே அந்த விண்டோவை மூடி விடுவார்கள் (அல்லது) கணிணியை அணைத்துவிடுவார்கள். அதற்குப் பதில் ஒரே கிளிக்கில் வேற டெஸ்க்டாப் திறந்தால் எப்படி இருக்கும்.

இந்த மென்பொருளின் பெயர் - டபுள் டெஸ்க்டாப் - DoubleDesktop 1.1

மென்பொருளின் அளவு - 205 கேபி மட்டுமே

புகைப்படங்கள் இல்லாமல் வலைத்தளங்கள் திறக்க

சில நேரங்கள் சில வலைத்தளங்களை திறக்கும் போது மிகவும் மெதுவாக திறக்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இதை தவிர்க்க உங்களுக்கு அந்த வலைத்தளத்தில் உள்ள புகைப்படங்கள் திறக்க வேண்டாம் என்று நினைத்தால் சுலபமாக செய்யலாம். அத்துடன் டயல் அப் இணைய இணைப்பு உபயோகபடுத்துபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

நெருப்பு நரி உலாவி உபயோகிக்கும் பயனாளர்கள் கீழே உள்ள வழிமுறையை பின்பற்றவும்.

நெருப்பு நரி உலாவி திறந்து அதில் Tools கிளிக் செய்து பின்னர் அதில் Options தேர்வு செய்து அதில் Content என்ற டேபை தேர்வு செய்யுங்கள். அதில் Load Images Automatically என்பதில் டிக் மார்க் எடுத்து விடுங்கள். பின்னர் OK தேர்வு செய்து வெளியேறுங்கள்.

இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் உபயோகிப்பவர்கள் இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 6 ஆம் பதிப்புக்கு மேல்

இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் திறந்து அதில் Tools கிளிக் செய்து அதனுள் Internet Options தேர்வு செய்து பின்னர் Advanced Tab என்பதனை தேர்வு செய்யுங்கள் கீழே கட்டத்தில் Multimedia என்பதற்கு கீழே Show Pictures அதன் நேரே பாக்ஸில் டிக் மார்க் எடுத்து விடுங்கள். பின்னர் OK தேர்வு செய்து வெளியேறுங்கள்.

ஆப்பிள் சபாரி உலாவி உபயோகிப்பவர்கள்

சபாரி திறந்து வைத்துக் கொள்ளுங்கள் மெனு கிளிக் செய்து அதில் Preferences தேர்வு செய்யுங்கள் பின்னர் மேலே Appearance என்பதனை கிளிக் செய்யுங்கள் அதில் Display images when the page opens. என்பதனை டிக் எடுத்து விடுங்கள் முடிந்தது பின்னரொ OK தேர்வு செய்து வெளியேறுங்கள்.

இனி உங்கள் உலாவியில் எந்த வலைத்தளம் திறந்தாலும் படங்கள் மட்டும் தோன்றாது.

Download Here

ஹார்ட் டிஸ்க் : அன்றிலிருந்து இன்று வரை



நம் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் தான் அனைத்து டேட்டாக்களும் பதிவு செய்யப்படுகின்றன. இங்குதான் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமர்ந்து கொண்டு கம்ப்யூட்டரை இயக்குகிறது. ஏறத்தாழ 50 ஆண்டுகளா கத்தான் ஹார்ட் டிஸ்க் கம்ப்யூட்டரின் ஓர் இன்றியமையாத உறுப்பாக இயங்கி வருகிறது. கம்ப்யூட்டர் பயன்பாடு வந்த தொடக்கத்தில் ஹார்ட் டிஸ்க் என்பதே இல்லை. இப்போது 2 டெராபைட் கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க்குகள் வந்துள்ளன. ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை 1 ஜிபிக்கும் குறைவான அளவுள்ள ஹார்ட் டிஸ்க்குகளே புழக்கத்தில் இருந்தன.

ஹார்ட் டிஸ்க்கின் விலை வேகமாகச் சரிந்து, தற்போது யாவரும் வாங்கும் வகையில் மலிவாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஒரு ஹார்ட் டிஸ்க் பதிந்து கொள்ளும் டேட்டா அளவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த ஹார்ட் டிஸ்க் வந்த பாதையினை தொடக்கம் முதல் இங்கு காணலாம்.

1956

ஐ.பி.எம். நிறுவனம் தன்னுடைய RAMAC 305 என்ற சிஸ்டத்தில் மிகப் பெரிய அளவிலான கொள்ளளவுடன் கூடிய ஹார்ட் டிஸ்க்கினை இணைத்து அறிமுகப்படுத்தியது. இந்த மிகப் பெரிய கொள்ளளவு எவ்வளவு தெரியுமா? 5 எம்.பி. அப்போது அது உண்மையிலேயே மிகப் பெரிய அளவிலான திறன் தான். ஒரு எம்பி டேட்டா கொள்ளளவிற்கு 10 ஆயிரம் டாலர் விலை எனக் குறிக்கப்பட்டது. இதன் திட அளவு இரண்டு ரெப்ரிஜிரேட்டர் அளவிற்கு இருந்தது. இதில் 24 அங்குல அளவுள்ள 50 பிளாட்டர்கள் இருந்தன.

1961

ஐ.பி.எம். ஹார்ட் டிஸ்க்கிற்கான டிரைவ் ஹெட் காற்றில் இருக்கும் வகையில் அமைத்தது.

1961

பைரண்ட் கம்ப்யூட்டர் 90 எம்பி திறனுடன் ஹார்ட் டிஸ்க்கைக் கொண்டு வந்தது. 39 அங்குல அகலத்தில் 24 டிஸ்க்குகள் கொண்டதாக இது அமைந்திருந்தது.

1963
முதல் முதலாக கம்ப்யூட்டர் சிஸ்டத்திலிருந்து வெளியே எடுக்கக் கூடிய ரிமூவபிள் ஹார்ட் டிஸ்க்கினை ஐ.பி.எம். உருவாக்கியது. இதன் திறன் 2.69 எம்.பி.; 14 அங்குல அளவில் 6 பிளாட்டர்கள் இருந்தன.

1966

புதுவிதமான ரெகார்டிங் ஹெட் கொண்ட ஹார்ட் டிஸ்க்க்னை ஐ.பி.எம். உருவாக்கியது. திறன் 29.17 எம்.பி.

1971

ட்ரேக் சர்வோ சிஸ்டம் கொண்ட முதல் ஹார்ட் டிஸ்க்கினை ஐ.பி.எம். கொண்டு வந்தது. இது 100 எம்பி திறன் கொண்டிருந்தது.

1973

நவீன வின்ச்செஸ்டர் ஹார்ட் டிரைவினை ஐ.பி.எம். கொண்டு வந்தது. 14 அங்குல பிளாட்டர்கள் 11 இருந்தன. திறன் 100 எம்பி.

1975

ஐ.பி.எம். 62 ௲ ரோட்டரி ஆக்சுவேட்டருடன் வந்த முதல் ஹார்ட் டிஸ்க். 5 அல்லது 9 எம்பி திறனுடன் அமைந்தது.

1976

43 எப்.டி. கிறிஸ்டல் என்னும், முதல் வளைந்து கொடுக்கக் கூடிய டிஸ்க் டிரைவ்; இரு பக்கமும் எழுதக் கூடியது. 8 அங்குல அகலத்துடன் 0.568 எம்பி கொள்ளளவு கொண்டது.

ஷுகார்ட் அசோசியேட்ஸ் என்னும் நிறுவனம் முதல் 5.25 அங்குல அகலத்தில் ப்ளெக்ஸிபிள் டிஸ்க்கினைக் கொண்டு வந்தது. இதில் 0.2188 எம்பி டேட்டா பதியலாம்.

1979

பியுஜிட்ஸு நிறுவனம் 10.5 அங்குல அகலத்தில் ஹார்ட் டிஸ்க் டிரைவினைத் தந்தது. ஆறு பிளாட்டர்கள் உள்ளன.

ஸீகேட் டெக்னாலஜிஸ் நிறுவனம் எஸ்.டி. 506 என்ற 5.25 அங்குல ஹார்ட் டிஸ்க்கினை 5 எம்.பி திறனுடன் கொண்டு வந்தது. இதில் 4 பிளாட்டர்கள் இருந்தன.

1980
முதல் கிகாபைட் அளவிலான ஹார்ட் டிஸ்க். ஐ.பி.எம். கொண்டு வந்த இந்த ஹார்ட் டிஸ்க் ஒரு ரெப்ரிஜிரேட்டர் அளவு இருந்தது. 250 கிலோ எடையுடன் 40 ஆயிரம் டாலர் மதிப்பு கொண்டிருந்தது.

1981

சோனி நிறுவனமும் டிஸ்க் தயாரிப்பு பணியில் இறங்கியது. 3.5 அங்குல ப்ளெக்ஸிபில் டிஸ்க்கினைக் கொண்டு வந்தது.கொள்ளளவு திறன் 0.4375 எம்பி.

1983

ரோடிம் முதல் 3.5 அங்குல ஹார்ட் டிஸ்க்கினைத் தயாரித்து வழங்கியது.இதில் இரண்டு பிளாட்டர்கள் இருந்தன. அளவு 10 எம்பி.

1986

அதிக திறனுடன் இயங்கும் ஸ்கஸ்ஸி ஹார்ட் டிஸ்க் டிரைவுடன் ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கம்ப்யூட்டர் வெளியானது.

1988

கானர் நிறுவனம் ஒரு அங்குல உயரத்திலான 3.5 அங்குல ஹார்ட் டிரைவினைத் தயாரித்து வழங்கியது. இன்று வரை இதுதான் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுகிறது. முதலில் இது 31 எம்பி திறன் கொண்டதாக அமைந்தது.

1992

ஸீ கேட் நிறுவனம் அதிர்வுகளைத் தாங்கக் கூடிய முதல் 2.5 அங்குல டிஸ்க் டிரைவினைத் தயாரித்து வழங்கியது.

1993

முதல் 7200 ஆர்.பி.எம். வேக ஹார்ட் டிஸ்க் டிரைவினை (Barracuda ST12550) ஸீ கேட் தயாரித்து வழங்கியது. இதில் 3.5 அங்குல அளவிலான பிளாட்டர்கள் பத்து அமைந்திருந்தன.

1996

மிக அதிக அளவிலான ஸ்டோரேஜ் டென்சிட்டி கொண்ட மீடியத்தினை ஐ.பி.எம். தந்தது. ஒரு சதுர அங்குல இடத்தில் நூறு கோடி பிட் டேட்டாவினை இதில் அமைக்க முடியும்.

1997

ஸீகேட் முதல் 10,000 ஆர்.பி.எம். வேக ஹார்ட் டிஸ்க் டிரைவினை வழங்கியது. முதலில் 3.5 அங்குல பிளாட்டர்களுடனும் பின் 3 அங்குல பிளாட்டர்களுடனும் அமைந் திருந்தது.

1999
மைக்ரோ டிரைவ் என அழைக்கப்படும் மிகச் சிறிய ஹார்ட் டிஸ்க்கினை ஐ.பி.எம். வழங்கியது. இதில் ஒரு அங்குல பிளாட்டர்கள் இருந்தன. ஒரு பிளாட்டரில் 340 எம்.பி. டேட்டா பதிய முடிந்தது.

2000
அதிவேக இயக்கத்துடன், 15000 ஆர்.பி.எம்., ஹார்ட் டிஸ்க் டிரைவினை ஸீ கேட் தயாரித்து வழங்கியது.

2002

பெர்பென்டிகுலர் மேக்னடிக் ரெகார்டிங் டெக்னாலஜி அடிப்படையில் ஹார்ட் டிஸ்க் இயங்க முடியும் என ஸீ கேட் காட்டியது. இதன் மூலம் ஒரு சதுர அங்குல சிப்பில் 100 கிகா பிட்ஸ் தகவல்களைப் பதிய முடியும்.

2005

ஹிடாச்சி முதல் 500 ஜிபி ஹார்ட் டிஸ்க்கினை வெளியிட்டது.

2006

நோட்புக் கம்ப்யூட்டர்களில் பயன்படக் கூடிய Momentus 5400.3 என்னும் 2.5 அங்குல முதல் ஹார்ட் டிரைவினை ஸீ கேட் தந்தது. இதன் கொள்ளளவு திறன் 160 ஜிபி.

Barracuda 7200.10 7200.10 என்ற பெயரில் 750 ஜிபி திறன் கொண்ட ஹார்ட் டிரைவினை ஸீ கேட் வெளியிட்டது.

2007

முதல் 1 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்கினை ஹிடாச்சி நிறுவனம் டெஸ்க் ஸ்டார் 7கே 1000 என்ற பெயரில் வெளியிட்டது. இதில் 3.5 அங்குல அளவிலான பிளாட்டர்கள் ஐந்து இருந்தன. ஒவ்வொரு பிளாட்டரும் பி.எம்.ஆர். தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி 200 ஜிபி டேட்டாவினைப் பதிந்தன.

2008

லேப் டாப் கம்ப்யூட்டரில் பயன்படுத்த ஹிடாச்சி, 2. 5 அங்குல அளவிலான ஹார்ட் டிரைவினைத் தந்தது. இதில் இரண்டு பிளாட்டர்கள் 5,400 ஆர்.பி.எம்.வேகத்தில் சுழன்றன.

2009

வெஸ்டர்ன் டிஜிட்டல் முதல் 2 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்கினைக் கொண்டு வந்தது. நான்கு 3.5 அங்குல பிளாட்டர்கள் இதில் உள்ளன. ஒரு பிளாட்டரில் 500 ஜிபி டேட்டா பதியமுடியும்.

வெஸ்டர்ன் டிஜிட்டல் மேலும் ஒரு சாதனையை மேற்கொண்டது. முதல் 1 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்கினை 2.5 அங்குல அகலத்தில் தயாரித்தது. லேப்டாப்பில் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தக்கூடிய இதன் பெயர் ஸ்கார்ப்பியோ புளு.

நெட் பைத்தியமா? சிகிச்சை தேவை

நெட் பைத்தியமா? சிகிச்சை தேவை

பலரும் கணினி முன் அமர்ந்தால் உலகமே மறந்து போய்விடுகிறது என்று மகிழ்ச்சியாகக் கூறும் காலம் போய், கணினி முன் அமர்ந்து உலகத்தையே மறந்துவிட்டவர்கள் அதிகரித்து வரும் காலம் இது.

இந்த நெட் பைத்தியங்களால் பணம் சம்பாதிப்பது நெட் சென்டர்கள் மட்டுமல்ல, நெட் பைத்தியங்களுக்கு சிகிச்சை அளிக்கிறோம் என்று அமெரிக்காவில் ஒரு மையம் ஆரம்பித்துவிட்டது வியாபாரத்தை.

இணையம் பற்றி வகுப்பு எடுத்து சம்பாதித்தவர்களுக்கு இப்போது வேலை இல்லை. அந்த நிலை மாறி அதில் அடிமையாகிக் கிடப்போரை மீட்பதற்கான சிகிச்சை மையம் ஏற்படுத்தும் நிலை வந்து விட்டது. அமெரிக்காவில் முதலாவது மையம் இப்போது பணியை தொடங்கியுள்ளது.

எப்போதும் இணையத்தில் எதையாவது செய்து கொண்டு கணினி முன் சிலையாகக் கிடப்பவர்களுக்கு இன்டர்நெட் அடிக்சன் சின்ட்ரோம் (ஐஏடி) என்ற மனநோய் ஏற்படுகிறதாம்.

இதுபோன்றவர்களுக்கு மனநோய் பாதிப்பில் இருந்து மீட்பதற்கென அமெரிக்காவின் ஹெவன்ஸ்பீல்டு மறுவாழ்வு அமைப்பு, முதல்முறையாக ஒரு ஐஏடி மீட்பு மையத்தைத் தொடங்கியுள்ளது. இந்த சிகிச்சைக்கு பெயர் என்னத் தெரியுமா? ரீ-ஸ்டார்ட் என்பதுதான். கணினியால் ஹேங்க் ஆகிப் போனவர்களுக்கு ரீ-ஸ்டார்ட் என்ற இந்த சிகிச்சை 45 நாட்கள் அளிக்கப்படும்.

இதுபற்றி ரீ-ஸ்டார்ட் இணை நிறுவனர், மனவியல் நிபுணர் மருத்துவர் லாரி கேஷ் கூறுகையில், இணையம் துவங்கியப் பிறகு பல்வேறு பிரச்சினைகளும் துவங்கிவிட்டன. சமூக மாற்றங்களும் ஏற்பட்டுவிட்டன. இதில் இணையத்தை ஒரு வரைமுறையில் வைத்திருப்பவர்கள் மட்டுமே தப்பிக்கின்றனர். அப்படி தப்பிக்க முடியாதவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.

webdunia photo
WD
இந்த மையத்தில் ஒரே நேரத்தில் 2 முதல் 6 பேர் வரை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பெறலாம். அங்கு சேர்பவர்களை இன்டர்நெட், வீடியோ/கணினி விளையாட்டுகளில் இருந்து 45 நாளும் பிரித்து வைப்பதுதான் முதல் வேலையாம். பிறகு, உடற்பயிற்சி, பாராயணம், யோகா, பிரசங்கம், மசாஜ், நடைப் பயிற்சி, கலந்தாய்வு என பல கட்ட சிகிச்சைகள் உண்டு. இதற்கென உள்ள சிகிச்சை நிபுணர்கள், பாதிக்கப்பட்டவர்களைத் தனித்தனியாக கவனிக்கிறார்கள்.

ஆனால் நெட் பைத்தியம் பிடித்தவர்களுக்கு முழுப் பைத்தியம் ஆகிவிடும், இதற்கான கட்டணத்தைக் கேட்டால். ஆம்.. ஒன்றரை மாதத்திற்கு அதாவது 45 நாட்களுக்கு ரூ.6.75 லட்சமாம்.

அம்மாடியோவ்...

இந்த கட்டணத்தைக் கேட்ட பிறகு தலை லேசாக சுற்றும். எனவே நீங்களாகவே நெட்டில் இருந்து ஓரளவிற்கு விலகிக் கொள்ளலாம் அல்லவா? அதற்காக எங்கள் இணைய தளத்தைப் பார்ப்பதை தவிர்க்க வேண்டாம். அதைப் பார்த்தால்தானே இப்படியெல்லாம் பிரச்சினை இருக்கிறது என்று உங்களுக்குத் தெரிய வரும். என்ன நான் சொல்வது?

கணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல்


கணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல்

பொதுவாக விண்டோஸ் இயங்குதளங்களை பயன்படுத்த துவங்கிவிட்டாலே வைரஸ் தாக்கம்,இயங்குதளம் Crash ஆவது போன்ற பிரச்சனைகள் எப்போது எழும் என்றே கூறமுடியாது. "நேற்றிரவு கூட நன்றாக தானே கணினியை இயக்கினேன் ஆனால் இன்று காலையில் கணினி மக்கர் பண்ணுதேன்னு” நம்மில் எத்தனை பேர் புலம்புவோம் அல்லவா?

இதுபோன்று விண்டோஸ் செயலிழந்து மக்கர் பண்ணும் போது தான் இந்த ரீஸ்டோரேஷனின் அவசியம் நமக்கு தெரிய வரும்.

ரீஸ்டோரஷன் என்றால் என்ன?

கணினி நல்ல நிலையில் இயங்கிக்கொண்டு இருக்கும்போது அதனை பேக்-அப் செய்து இதர பார்ட்டிஷனில் சேமித்து, கணினி மக்கர் செய்யும்போது சேமித்த கணினியின் பேக்-அப்பை கொண்டு கணினியின் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதே ரீஸ்டோரேஷன் ஆகும். இன்றைய பதிவில் நாம் அதனை பற்றிதான் விபரமாக அறிந்து கொள்ள இருக்கின்றோம்.

பொதுவாக கணினியை இரண்டு வகையாக பிரிப்போம் ஒன்று Branded மற்றொன்று Assembled இதில் Branded கணினியாக‌ இருந்து அதனை நீங்கள் Genuine OS உடன் வாங்கினால் அந்த கணினி தயாரிப்பாளரே உங்களுக்கு ஒரு ரீஸ்டொரேஷன் cd/dvd யை அளிப்பார் (Dell,Acer,HP etc..). விண்டோஸில் ஏதாவது பிழை ஏற்பட்டு பூட் ஆக மறுக்கும் போது இந்த cd/dvd யை போட்டு ரீஸ்டோரேஷன் செய்துகொண்டு நீங்கள் கணினியை எந்த தேதியில் வாங்கினீர்களோ அந்த தேதியின் நிலமைக்கு கொண்டு வரலாம்.

இதே Branded கணினியை Free DOS ஸாக வாங்கினீர்க்ளேயானால், இந்த ரீஸ்டோரேஷன் சாத்தியம் இல்லை. இந்த சூழ்நிலையில் நாம் தான் ரீஸ்டோரேஷன் உருவாக்க வேண்டும் (IBM,DELL,ACER etc without OS).

அடுத்ததாக Assembled கணினி, இது நமக்கு ஏற்ற கணினியை நாமே தனித்தனியாக வாங்கி சர்வீஸ் Engg மூலமாக உருவாக்குவது ஆகும். இங்கு பிரான்ஸ் நாட்டில் Assembled கணினியின் எண்ணிக்கை மிகக்குறைவே, இங்கு Branded கணினி முறையான OS உரிமம் பெற்றே தான் பயன்படுத்துவோம். ஆனால் இந்தியாவில் பயன்படுத்தப்படும் அதிகப்படியான கணினிகள் Assembled கணினிகளே. அவ்வாறு கணினியின் பாகங்களை கடையில் வாங்கும்போது நம்மில் பலரும் விண்டோஸ் தொகுப்பை பணம் செலுத்தி வாங்குவது கிடையாது. எனவே தான் Pirated விண்டோஸ் தொகுப்புகளை உலகில் அதிகமாக பயன்படுத்துவது ஆசியாவில் தான் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகின்றது. என்ன செய்வது மைக்ரோசாப்டின் விண்டோஸ் தொகுப்புகளின் விலை அப்படி. அதே நேரத்தில் பைரேட் செய்து பயன்படுத்துவதும் தவறு.

இந்த ரீஸ்டோரேஷனால் என்ன பயன்?

கணினி நல்ல நிலமையில் இயங்கிக்கொண்டிருக்கும் போதே ரீஸ்டோரேஷன் உருவாக்குவதால் சில நன்மைகள் நமக்கு கிட்டும்.
வன்தட்டை (Hard Disk) பார்மேட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, ஆகையால் கணினியின் வந்தட்டிற்க்கு பாதுகாப்பு கிடைக்கின்றது. வன்தட்டை அடிக்கடி பார்மேட் செய்வது நல்லதல்ல.

விண்டோஸ் சிடியை தேடி அலைய வேண்டாம்.

டிரைவர் சிடி இல்லையே என்ற கவலை வேண்டாம்.

மேலும் நீங்கள் விண்டோஸ் Genuine தொகுப்பு பயன்படுத்தினால் அதனை மைக்ரோசாப்டில் வருடத்திற்கு 4 முறை மட்டுமே இணையத்தில் ஆக்டிவேஷன் செய்ய இயலும்.

விண்டோஸை புதிதாக நிறுவும் நேரத்தை காட்டிலும் விரைவாக ரீஸ்டோரேஷனை செய்து கணினியை இயக்கி விடலாம்.

இதுபோன்ற நன்மைகள் இருப்பதால் கணினியை உங்களது தேவையான மென்பொருட்களை நிறுவிய பின் ரீஸ்டோரேஷன் உருவாக்கி அதனை பேக் அப் செய்து பாதுகாப்பாக சேமித்துவைப்பது சாலச்சிறந்தது.

நம்மில் பலரும் இதனை செய்வது கிடையாது. விண்டோஸில் பிழை ஏற்பட்டு கணினி பூட் ஆக மக்கர் பண்ணும் போது உடனே பார்மேட் செய்து விண்டோஸை புதிதாக நிறுவிவிடுவோம். பல சர்வீஸ் Engg களும் பரவலாக இதைத்தான் செய்கிறார்கள்.

நாங்கள் எங்களின் பல வாடிக்கையாளர்களுக்கு பல கணினிகளை Assembling செய்து தந்திருக்கின்றோம், தந்துகொண்டும் இருக்கிறோம். இவ்வாறு செய்யும் போது கண்டிப்பாக நாங்கள் அவர்களுக்கு ரீஸ்டோரேஷன் செய்து எங்களது தகவலையும் அந்த ரீஸ்டோரேஷன் மென்பொருளிலேயே எடிட் செய்து தந்துவிடுவோம். கணினி மக்கர் செய்யும் போது அவர்களது கணினியில் ரீஸ்டோரேஷன் செய்து 30 நிமிடத்தில் கணினியை இயக்கிவிடுவோம்(Hardware ல் பிழை இல்லாமல் இருந்தால்).

இதுபோல நீங்களும் ரீஸ்டோரேஷன் உருவாக்கிக்கொண்டு ரீஸ்டோரேஷன் செய்ய கற்றுக்கொண்டால் கணினியில் பிழை ஏற்படும் போது எளிமையாக ரீஸ்டோரேஷன் செய்துகொள்ளலாம்.

இவ்வாறு ரீஸ்டோரேஷன் உருவாக்க எந்த மென்பொருள் பயன்படுத்தலாம் என்று நீங்கள் நினைக்கலாம். நாங்கள் எங்களது வாடிக்கையாளருக்கு பயன்படுத்துவது Drive Image XML என்ற இலவச மென்பொருளைத்தான். பொதுவாக ரீஸ்டோரேஷன் செய்யும் மென்பொருள்கள் எல்லாம் விலைகொடுத்து வாங்கும் சூழ்நிலையில் Drive Image XML இன் பயன்பாடு நன்றாக இருக்கின்றது.

இதனை கணினியில் நிறுவி பேக்-அப் செய்யலாம். பேக்-அப் செய்யும் போது அந்த கோப்பின் அளவை குறைக்க Compression ம் வைத்திருக்கின்றனர். இது விண்டோஸ்,விஸ்டா,விண்டோஸ்7 க்கு சப்போர்ட் செய்கின்றது. FAT,FAT16,FAT32,NTFS format களை ஆதரிக்கின்றது.

Drive Image XML இன் குறைபாடு

இலவசமாக கிடைக்கும் இந்த Drive Image XML இல் உங்களது விண்டோஸ் பூட் ஆகவில்லை என்றால் ரீஸ்டோர் செய்வதில் ஒரு சிக்கல் இருக்கின்றது.

அதாவது Drive Image XML அளிக்கும் இலவச plug in ஐ வைத்து நீங்களாக தான் Windows Pre Enviroinment அல்லது Bart Pre Enviroinment துணைக்கொண்டு bootable cd உருவாக்கி தான் உங்களது கணினியை ரீஸ்டோரேஷன் செய்ய இயலும் என்பது சாதாரண கணினி பயனாளர்களுக்கு சாத்தியமில்லை என்பது கொஞ்சம் வருதப்படவேண்டிய விஷயம்.

விமானம் பறப்பது எப்படி?

விமானம் பறப்பது எப்படி?

இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்

பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்.

சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…
இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.

ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு

A. ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)

B. முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust

C. கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight

D. பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag





ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்

Weight=Lift

Drag=Thrust

த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்

டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்

விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்

விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்

சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,

அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.

(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)

விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்

பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது.

ஹெலிகப்டரின் மேலெழும்பு விசை அதன் மேதிருக்கும் விசிரியால் வருகிறது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்

உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக..

விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது

விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்

இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது

காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்ரழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)

விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொறுத்தே அமையும்

அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்

இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?

அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (ஹெலிகப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் ஹெலிகப்டருக்கு வராது)

இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது

விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பறப்பதற்கான காரணமும் இதுவே.

அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது

ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை தேவை எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது.

உங்கள் கருத்துக்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே!

Recover Lost Passwords With AT4RE Password Recovery



Recover Lost Passwords With AT4RE Password Recovery

Experts advice to use unique (hard to guess) and different passwords for your various accounts, so that even if one of your accounts’ password is compromised, your other accounts remain safe. Otherwise, it will be a “game-over” situation for you.


However, it is hard to remember so many passwords, especially for those accounts which are not used frequently. In situations like this AT4RE Password Recovery could be a life-saver for you.

Here is the list of applications/services whose passwords/keys can be recovered by AT4RE Password Recovery:

* FileZilla
* CuteFTP
* Total Commander
* TurboFTP
* Mozilla Firefox 2.x & 3.x
* Dial-up information
* Internet Explorer 7
* Internet Explorer 8
* MSN Live Messenger 8
* Microsoft Office 2003
* Microsoft Office XP
* Windows product ID & key
* PaltalkScene
* Becky!
* Thunderbird
* Miranda
* Trillian Astra
* The Bat!
* DynDNS

Download AT4RE Password Recovery for Windows from Here

Sunday, August 29, 2010

Plop BootManager

Plop BootManager: Boot From USB Drive [Freeware]



There are times when you wish to boot your system from a pen drive, especially, when it is not booting from the HDD, and you urgently want to access a file in your system. Now you can use Plop BootManager to boot your system via USB drive, even if your PC or laptop does not support USB boot.

Guide to boot any PC/laptop via USB Pen drive:
1. Plop BootManager.
2. Extract and burn plpbt.iso on a CD.
3. Insert this bootable CD in optical drive and restart the system (Note: Change boot preference settings in BIOS, and give first preference to CD/DVD drive).
4. A screen will appear, asking for the boot device, select USB drive as the boot device.

Now, you can boot your PC or laptop with any operating system supporting USB boot. Learn more about Plop BootManager Here

WirelessNetView




Nowadays using wireless networks is becoming a bit common for accessing internet or sharing files over local area network. But there may be more than one wireless networks nearby, these are automatically detected by windows as soon as Wi-Fi receiver of your system is switched on. Windows detects almost all networks except the hidden ones but does not provide much information on them. WirelessNetView is a handy free utility that can be used for this purpose.




WirelessNetView is a windows freeware portable application that can scan and detect broadcasting wireless networks present around you. After scanning the networks it presents them in a list. Double clicking on any of the network will bring up a separate window showing all the details like average signal strength, last signal strength, SSID, MAC address, security, whether it is connectible or not etc.

It will help you to determine and analyze the best network you can connect to. As it is a portable application it can also be stored on USB storage devices for quick reference.

Download Here:
http://www.nirsoft.net/utils/wireless_network_view.html