Monday, August 30, 2010

போலி மனிதர்கள்

சிரிப்புக்குள் விஷம் வைத்து செலவழிப்பார்

சில்லறைக்கு மட்டுமே வரவு வைப்பார்

கறுப்புக்குள் பணமாக குவித்து வைப்பார்

கடவுளுக்கும் கொஞ்சூண்டு கொடுத்து வைப்பார்

போகவர உறைத்தாலும் பொருட் படுத்தார்

போன்சாய் மரமாக வெட்டிக் கொள்வார்

பருப்புக்கும் அரிசிக்கும் அலைக் கழிவோர்

நெருப்புக்குள் சினமாக நிமிர்ந்து விட்டால்

அறுப்புக்குக் களையாக ஆய் விடுவார்

அங்கங்கே மிதிபட்டு அழிந்திடுவார்

----------------------------
நன்றியுடன்
தோசை நண்பன்

No comments:

Post a Comment