Friday, November 19, 2010

நேத்து அடிச்ச மப்பு....



ஹலோ நண்பர்களே,
இன்று எனது கல்லூரியில் பேசிய ஒரு சிறு நிகழ்ச்சியை தங்களிடம் கூறிகிறேன்.

ராமசாமி, கோவிந்தன் மற்றும் முருகன் என்னும் நபர்கள் சந்தித்து கொள்கின்றனர்.

ராமசாமி: ஏம்பா, நேத்து நம்ம ரவி பையன்களும், வேறு ரெண்டு பெரும் போலீஸ்ல மாட்டீட்டானுங்கலாமே?

கோவிந்தன்: ஆமாப்பா, தண்ணியடிச்சிட்டு வழில போறவங்கிட்ட எல்லாம் வம்பு பண்ணிட்டு இருந்தா அப்படித்தான் ஆகும்.

முருகன்: இவனுக எல்லாம் அப்பன் ஆத்தா கஷ்டபடுறதயே நெனச்சுப்பாக்கமாட்டனுகளா! ...... எப்ப நம்ம ஊர் பையனுக வெட்டியா, கூட்டுசேர்ந்து சுத்த ஆரம்பிச்சானுகளோ, அப்பயே சீரழிய ஆரம்பிச்சிடானுக..

ராமசாமி: ஆமாப்பா முருகா, நீ சொல்லுவா, நீ கஞ்சியோ கூழோ குடிச்சாலும் உம் பையன் ராமுவ பட்டணத்துல படிக்கவச்சிட்டிருக்க..

கோவிந்தன்: நல்லவேளை, இங்கேயே விட்டிருந்தா அவனும் சேர்ந்து கெட்டுபோயிருப்பான்..

முருகன்: அவன்தான்பா, என் உசிரு. அவன் நல்லாயிருந்த அதுவே போதும்.


அன்று இரவு முருகனின் வீட்டில் அவனும் அவனது மனைவியும் பேசிக்கொள்கிறார்கள்...

மனைவி: ஏங்க பையனுக்கு, பணம் போய் சேர்ந்திருக்குமா?

முருகன்: தெரியல...

மனைவி: பையன் கண்ணுக்குள்ளயே இருக்காங்க, போய் ஒரு எட்டு பாத்துட்டு வந்திருங்களேன்..

முருகன்: எனக்கும் பாக்கனும்போலதான் இருக்கு காசுக்கு என்ன பண்ணுறது.

மனைவி: சீட்டுக்காசு ஒரு ஐம்பது ரூபா இருக்கு. போயிட்டு வாங்க, கூடவே இந்த ஊறுகா பாட்டிலையும் கொண்டு போங்க. அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.


இங்கே கல்லூரி விடுதியில் முருகனின் மகன் ராமுவும் அவனது நண்பனும்....

நண்பன்: டே ராமு எந்திரிடா, மணி 11 ஆகுது... நேத்தடிச்ச மப்பு தெரியாம தூங்கிட்டு இருக்க.... டாய் உனக்கு மணியார்டர் வந்திருக்குடா.

(ராமு எழுந்து மனியார்டருடன் ஒரு லெட்டரையும் பெற்று கொண்டு வந்தான்)..

நண்பன்: டாய் மணியார்டர் ஹ்ம்ம், கொண்டாடிட வேண்டியதுதான். என்னடா லெட்டரும் வந்திருக்கு.

ராமு: ஏண்டா நீ வேற, நானே நாளைக்கு லீவுக்கு தண்ணியடிக்கப் பொய் சொல்லி அப்பாகிட்ட பணம் கேட்டு வாங்கியிருக்கேன்.

நண்பன்: என்ன லெட்டருல பழைய பஞ்சாங்கமா, வழக்கம்போல கிழிச்சி போட்டியா?

ராமு: ம்ம்ம்..... வேற என்ன, அப்பாவோட லெட்டரெல்லாம் எவண்டா படிப்பான்..!

(நண்பன் அதை கிழித்து எறிகிறான். அங்கு கண்ணீருடன் நின்று கொண்டிருந்தார் (ராமுவை பார்க்க வந்த தந்தை முருகன்)..........


பதிவு பிடித்திருந்தால் கருத்து தெரிவியுங்கள்..

2 comments:

  1. இந்த வயசு இப்படி தான் இருக்கும்.இப்ப பண்ணாம எப்ப பண்ணுவாங்க ?.

    ReplyDelete
  2. Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....


    www.ellameytamil.com

    ReplyDelete