Saturday, November 20, 2010

இப்படிக்கு

கண்ணீர் விட்டுக் கொண்டே இருப்பேன்
நீ என்னை அணைக்கும் வரை
இப்படிக்கு

-- மெழுகுவர்த்தி


நான் சிரித்ததற்கான
விலை எங்களுக்கு மரண தண்டனையா
இப்படிக்கு

-- பூக்கள்


ஏய் கடலே
நீ எத்தனைமுறை அலைகளாக
என் கால்களில் விழுந்தாலும்
உனக்கு மன்னிப்பே கிடையாது
இப்படிக்கு

-- சுனாமியில் பெற்றோரை இழந்த சிறுவன்


நீ என்னை எட்டி உதைத்தபோது
என் இதயம் கண்ணீர் விட்டது
உன் பாதம் வலிக்குமே என்று
இப்படிக்கு

-- ஒரு தாயின் கருவறை

5 comments:

  1. இப்படிக்கு... வித்தியாசமான கவிதைகள்.

    ReplyDelete
  2. ஒவ்வொரு வரியும் டச்சிங்கா இருந்தது!!!

    அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
    மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

    ReplyDelete
  4. கண்ணீர் விட்டுக் கொண்டே இருப்பேன்
    நீ என்னை அணைக்கும் வரை
    இப்படிக்கு

    -- மெழுகுவர்த்தி

    ஹாய் இது ந்ல்லா இருக்கே....உருகிப்போனேன்

    ReplyDelete