Sunday, November 21, 2010

கவிதை கவிதை......

* பல நூறு வருடம் ஆகும்
ஒரு வைரம் உருவாக.....
அப்படி இருக்க....
நான் மட்டும் எப்படி
பத்து மாதத்தில்...


* போகும்போதே ரசித்துவிட்டு போ
திரும்ப வந்தால் இருக்காது...
வாழ்க்கை.


* யாருக்காகவும் உன்னை
மாற்றிக்கொள்ளதே...
ஆனால்..
உனக்காகத் தன்னையே
மாற்றி கொள்பவர் கிடைத்தால்
தொலைத்து விடாதே...


* அதிக அன்பு வைத்திருப்பவர்களைக்
காலம் பிரித்துவிடும்...
பாவம் அதற்கு தெரியாது
பிரிவு அன்பை அதிகரிக்கும் என்று....


* இன்பத்தின் இரகசியம்
நீ விரும்புவது அல்ல.
உன்னை பிறர் விரும்புவதே....


* வாழ்க்கையின் அர்த்தம் புரிவது கஷ்டம்..
புரிந்தால் வாழ்வது கஷ்டம்..


* காதலின் சின்னம் கேட்டேன்
அவள் கல்லறை(தாஜ்மஹால்) என்றாள்..
கல்லறைக்கு வழி கேட்டேன்...
என்னை காதலி என்றால்...


* மிகபெரிய தவறுகளையும் மன்னிக்கும்
ஒரே நீதிமன்றம்
ஒரு தாயின் கருவறை.


* நீ என்னை விட்டு பிரிந்து சென்றாய்
ஏன் உன் நினைவை மட்டும் என்னுள் மறந்து சென்றாய்.


* நான் நினைப்பது நீயாக இருக்க வேண்டும்
ஆனால்
நீ மறப்பது நானாக இருக்க கூடாது.


* அவளும் ஓர் அதிசயம்தான்
இதயமே இல்லாமல் உயிர் வாழ்கிறாள்.


நீங்களும் உங்கள் கவிதையை இங்கே கொட்டுங்கள் கமெண்ட் என்னும் இடத்தில.

2 comments:

  1. முயற்சிகள் தொடரட்டும்

    ReplyDelete
  2. டக் டக்னு வந்து கொட்டுதே கவிதை ...அருமையான கருத்து கேப்ஸ்யூல்

    ReplyDelete