Monday, November 22, 2010

கைமாத்து

அவசரத்தேவை
வேறு வழியேயில்லை.
தேடிச் சென்ற நண்பன்
நாசூக்காய் கைவிரிக்க......
உறவுகள் உதட்டைப் பிதுக்க ....
பழகிய சில இடங்களில்
பழைய பாக்கியே இன்னும்....
என இழுக்க....
ஏதோ ஒரு பேருந்தில்
ஏறி அமர்ந்தேன்.
நல்லவேளையாய்
காசு இருந்தது டிக்கெட்டுக்கு
நெஞ்சு வெடித்து
விடக் கூடாதென
அஞ்சு வரி அதன் பின்னே
நுணுக்கி எழுதி
'அவமானம்'
எனத் தலைப்பிட்டேன்.
அழகாய் வந்திருக்க
ஆறியது சற்றே மனசு....
கைமாத்தாக கவிதையாவது
கிடைத்தது என்று......



ஒரு தாயின் குரல்....



மகனே நீ இருக்க ஒரு கருவறை இருந்தது
என் வயிற்றில்
நான் இருக்க ஒரு இருட்டறை கூடவா
இல்லை உன் வீட்டில்!

.

உங்களுக்கு கவிதை தெரிந்தால் கமெண்ட் பகுதியில் கூறுங்களேன்....

3 comments:

  1. //நான் இருக்க ஒரு இருட்டறை கூடவா
    இல்லை உன் வீட்டில்!//

    அருமை..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. // உங்களுக்கு கவிதை தெரிந்தால் கமெண்ட் பகுதியில் கூறுங்களேன்....//
    ஏன் இப்படி...

    பிப்ரவரி 14 ன்னு எதோ ஒன்னு கண்ணுல தெரிஞ்சது... இங்க வந்து பாத்தா ஒன்னையும் காணோம்...

    ReplyDelete
  3. // மதுரை சரவணன் said...

    thanks madurai saravanan sir

    ReplyDelete