Wednesday, December 22, 2010

நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை...

இங்கே நான் கூறி இருப்பது நண்பர்களாகிய இருவருக்கும் இடையில் உள்ள ஆழமான நட்பை பற்றி ஒரு சில வரிகள் உங்களுக்காக.


நட்பு...

நண்பர்களாக பழக வேண்டிய கட்டாயம் இல்லை....

நட்புக்கு அது தேவையும் இல்லை...

எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்

இங்கே சந்தித்துக்கொண்டோம்....

காலங்கள் போடும் கோலத்தில் நாமும் ஒரு புள்ளியாக..

நம்மை இணைக்கும் (நட்பு)பலமாக நாமே இருக்கிறோம்..

இறுதிவரை தொடருமா என்று நமக்கே தெரியாது...

இருந்தும் உறவாடினோம்...

பிரிந்தாலும் எங்கோ எப்போதோ சந்திதுகொள்வோம்...

அப்போ நலம் விசாரிக்க மட்டுமே நேரம் கிடைக்கும்..

அவரவர் பாதையில் அவரவர் பயணத்தை தொடருவோம்...

மனதில் ஒரு வலி மட்டும் இருக்கும்...ஏன் என்று தெரியாது...

இது நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை...



நீங்கள் உங்கள் கமெண்ட் ஐ இங்கே சொடுக்கவும்...

1 comment:

  1. நட்பு பற்றிய உங்களை அப்படியே வார்த்தைகளில் வார்த்து இருக்கிறீர்கள், அருமை. நல்ல முயற்சி.

    ReplyDelete